# 66 சொந்தம் ஒன்றைத் தேடும் - என்னைப் பெத்த ராசா

படம்: என்னைப் பெத்த ராசா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா.. இன்பம் தன்னைத் தூண்டுதா
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

: வானத்து அம்புலியை வரவழைக்க வேணுமென்று
தனியாகத் தவமிருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
வானத்து அம்புலியை வரவழைக்க வேணுமென்று
தனியாகத் தவமிருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமிதன்னில் உன் உருவில் வந்ததம்மா
வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை தெய்வம் இணைத்தது

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

பெ: சிறு வீணை தானெடுத்து.. விரலாலே சுதியெழுப்பி
குறுநகையாள் பாடுவதைக் குறும்புடனே கேட்டீரோ
சிறு வீணை தானெடுத்து.. விரலாலே சுதியெழுப்பி
குறுநகையாள் பாடுவதைக் குறும்புடனே கேட்டீரோ
பாடல்தனில் நீ மயங்கி பைங்கொடியே வேண்டுமென்றாய்
குரல்தனிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டி நின்றாய்
ஈசனருள் உனக்கே இருந்தது
ஏந்திழையின் மனமும் இணைந்தது
நம்மை அன்புதானே இணைத்தது

: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா.. இன்பம் தன்னைத் தூண்டுதா
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

0 மறுமொழிகள்:

Post a Comment