# 52 நீயெங்கே என்னன்பே - சின்னத் தம்பி

படம்: சின்னத் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

 நீயெங்கே..
...
என்னன்பே..
...
மீண்டும் மீண்டும் மீண்டும்
...
நீதானிங்கு வேண்டும்
...
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...

விடிகிற வரையினில் கதைகளைப் படித்ததை நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினைத் தொடர்ந்திட மனமிது துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும்போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியுமிங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...

ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆஆ..
...

வீதியென்றும் வெட்டவெளிப் பொட்டலென்றும் வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றலிங்கு பார்க்குமா பார்க்குமா
எத்தனென்றும் ஏழை பணக்காரனென்றும் ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தனென்றும் பிச்சை போடும் பக்தனென்றும் உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றுமுண்டு
கதைகளிங்கு முடியாது மீண்டும் தொடரட்டுமிங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...

0 மறுமொழிகள்:

Post a Comment