படம்: கண் சிமிட்டும் நேரம்
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: ம்ம் ம் ம்..
பெ: ம்ம் ம்ம்ம்ம் ம்..
ஆ: ஆஆஆ ஆஆ ஆ..
பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
ஆ: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
ஆ: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
ஆ: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
...
ஆ: இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
ஆ: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
ஆ: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
ஆ: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
ஆ: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
பெ: உறவுக்குள் ஒன்றான காலமிது
ஆ: உரிமைக்கு நான் தந்த பாலமிது
பெ: கண்ணில் ஒரு மின்னல்.. புது கவிதைகள் படிக்கட்டும்
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
ஆ: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
ஆ: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
ஆ: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
...
பெ: மனமெதிலோ அலைகிறதே
ஆ: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
ஆ: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
மனமெதிலோ அலைகிறதே
ஆ: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
ஆ: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
ஆ: ஒன்றுக்குள் ஒன்றான தேகமிது
பெ: உயிருக்குள் நான் கொண்ட பாகமிது
ஆ: இன்பம் இனி என்றும்.. புது சுரங்களும் பிறக்கட்டும்
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
ஆ: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
ஆ: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
ஆ: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
ஆ&பெ: விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
...
# 72 விழிகளில் கோடி அபிநயம் - கண் சிமிட்டும் நேரம்
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
2/24/2010 11:15:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சித்ரா,
வி.எஸ்.நரசிம்மன்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment