# 54 மஞ்சப் பொடி தேய்க்கையிலே - செண்பகமே செண்பகமே

படம்: செண்பகமே செண்பகமே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
தண்ணி தொட்ட பாகமெல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலமெப்போ
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
...

குத்தாலச் சாரலுக்கு யோகமடி
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி
தொட்டுத் தொட்டுச் சேர்ந்த பின்பு தீருமடி
உன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி
ஒண்ணாச் சேர வந்தாப் போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
...

மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன
தேனாறு உன்னுதடில் வந்ததென்ன
தேனெடுத்து நானறிந்த நேரமென்ன
உன்னோட பூமேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாகத் தூவும்போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
தண்ணி தொட்ட பாகமெல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலமெப்போ
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
...

0 மறுமொழிகள்:

Post a Comment