#237 மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி

படம்: எங்க தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & மின்மினி



: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
...

: பூங்காத்து வீசுது.. அனலைப் பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
பெ: தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டுப் பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
: சேலை கட்டும் நந்தவனம் நீயா.. செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா
பெ: கண்ணுக்குள்ளே காதலெனும் தீயா.. சின்ன இடை தேய்வதென்ன நோயா
: கட்டியணைச்சா.. முத்தம் பதிச்சா.. நோய் முழுக்கத் தீர்ந்துவிடும் வாம்மா.. ஹோ..

பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
...

பெ.குழு: துரு ருருருரு ருருருரு ருரு ருருருரு ருருருரு..
துரு ருருருருருரு ருரு.. துரு ருரு ருருருருருரு..
துரு ருரு ருருருருருரு..
...
பெ: கல்யாண மாப்பிள்ளை.. எனை நீ பார்க்கலை.. கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
: ஊரெங்கும் தோரணம்.. நடக்கும் ஊர்வலம்.. உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெ: அந்தியிலே சந்தனத்தைப் பூச.. ஆசைகளைக் கண்களிலே பேச
: சேலையிலே நீ விசிறி வீச.. காலையிலே பார்த்த கண்ணுக் கூச
பெ: என்ன சுகமோ.. எப்ப வருமோ.. என்னென்னவோ பண்ணுதய்யா ஆசை.. ஓ..

: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
பெ: மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
: மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
: மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
...

0 மறுமொழிகள்:

Post a Comment