#247 அந்தியில வானம் - சின்னவர்

படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா



: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
: கூடும் காவிரி.. இவதான் என் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..
பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
...

பெ: கட்டுமரத் தோணி போலக் கட்டழகன் உங்க மேல
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவையில்ல.. முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
: பாலூட்டும் சங்கு.. அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து
பெ: நாணம் உண்டல்லோ.. அதை நானும் கொண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ.. ஹோ..

: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

: வெள்ளியலை தாளந்தட்ட.. சொல்லியொரு மேளங்கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா.. ஆ ஆ ஆ..
மல்லியப்பூ மாலை கட்ட.. மாரியிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா.. ஆ.. ஆஆஆ..
பெ: கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்
: தேகம் ரெண்டல்லோ.. இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகமொன்று ஜீவனொன்று கூடும் இன்றல்லோ

பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: கூடும் காவிரி.. இவதான் உன் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..

: அந்தியில வானம்
பெ: ஹா..
: தந்தனத்தோம் போடும்
பெ: ஆஹா..
: அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்
: ஹோய்..
பெ: சுந்தரியப் பாரும்
: ஆஹா..
பெ: சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

0 மறுமொழிகள்:

Post a Comment