#252 யமுனா நதிக்கு வந்து - கண்ணே கலைமானே

படம்: கண்ணே கலைமானே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி



பெ.குழு: ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பெ: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ.குழு: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ: காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ: வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ.குழு: முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ: குறும்பு செய்வாண்டி சிங்காரக் கண்ணன்
வழியை மறைத்துக் கொண்டு வம்புகள் பண்ணிக் கொண்டு
ஜாடை வார்த்தைகள் சொல்லி அணைப்பான் ஆசை கொண்டு
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
...

பெ: சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ.குழு: இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ: ராதைக்கு இவனின்று சுகமிங்கு ஏது
மனதைத் திருடிக் கொண்ட மாயக் கள்ளனடி
மையல் பார்வைகளாலே மயக்கும் கண்ணனடி
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..

பெ: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ&பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

0 மறுமொழிகள்:

Post a Comment