#251 நீதானே எந்தன் பொன் வசந்தம் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
...
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
...

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன்னாடை.. ஹே.. மிதக்கின்ற பாலாடை
உன் காலை.. ஹே.. குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில்
பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும்

எந்நாளும்.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
...

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில்.. ஹே.. இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள்.. ஹே.. உனைக் கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவறிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம்

எந்நாளும்.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
ம்ம்ம் ஹும்ஹும்ஹும் ம்ம்..
ஆஆஆ ஹாஹாஹா.. ஆஆ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment