படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: ஆஆ.. ஆஆ.. ஆஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
ஆ: உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்.. ஹாஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
...
பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆ ஆஆ..
ஆ: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
பெ: மௌனமே சம்மதம் என்று
ஆ: ம்..
பெ: தீண்டுதே மன்மத வண்டு
ஆ: ம்..
பெ: மௌனமே சம்மதம் என்று.. தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு
ஆ: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பெ: பொன் மேகம் நம் பந்தல்
ஆ: உன் கூந்தல் என் ஊஞ்சல்
...
பெ: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
ஆ: பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெ: ஹா..
ஆ: கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெ: ஹா..
ஆ: பூவிலே மெத்தைகள் தைப்பேன்.. கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்.. ஹா.. ஹா..
பெ: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
ஆ: உன் கூந்தல் என் ஊஞ்சல்
பெ: உன் வார்த்தை சங்கீதங்கள்.. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
ஆ&பெ: பொன் மேகம் நம் பந்தல்
...
#249 ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
2/26/2013 08:08:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி,
வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment