#178 ரோஜாப்பூ ஆடி வந்தது - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி


பெ.குழு: சா.. சாச்ச சாச்சா.. சா.. சாச்ச சாச்சா..
சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
பூவைக் கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசித் தீராது.. ஆசை என்றும் ஆறாது
லவ்.. லவ்.. என்பதா.. சொல்.. சொல்.. மன்மதா
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

பெ.குழு: தூருரூருரூருரூ.. தூருரூருரு..
தூருரூரூரூ.. தூருரூரூரூ..
சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: நேற்று நீர் விட்டது.. இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ.. நூறு பூப்பூத்தது
சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ
சொல்லிச் சொல்லிப் பொழுதை இன்னும் கழிப்பதோ
தொடு.. தொடு.. தொடாமல் நிலாவின் மேனி நாளெல்லாம் தேய்ந்ததே

பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

பெ.குழு: சா.. சச்சா சா.. சா.. சச்சா சா..
...
பெ.குழு: சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: நீயும் அச்சம் விடு.. நூறு முத்தம் இடு
மீத மிச்சம் எடு.. மேலும் சொல்லிக் கொடு
அந்திப் பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புற நினைவில் சிந்து படிக்குது
இதோ.. இதோ.. உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது.. தாங்குமா

பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
பூவைக் கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசித் தீராது.. ஆசை என்றும் ஆறாது
லவ்.. லவ்.. என்பதா.. சொல்.. சொல்.. மன்மதா
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

0 மறுமொழிகள்:

Post a Comment