படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: தா.. தரரீநா.. தரரீ..
தரிராநாநா.. நா..
...
ஆ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
ஆ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
...
ஆ: காதல் பேசும் தாழம்பூவே.. ஓவியம் ஆனதே கைகள் மீது
பெ: கைகள் வண்ணம் தீட்டும் நேரம் ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
ஆ: பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
பெ: காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
ஆ: நீதானே தாலாட்டும் நிலவே
பெ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
...
பெ: பாதி ஜாமம் பாயும் போடும்.. பால் நிலா வானிலே காதல் பேசும்
ஆ: ஊரைத் தூக்கம் ஆளும்போது பார்வைகள் பேசுதே பாவையோடு
பெ: காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆ: ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
பெ: நான்தானே தாலாட்டும் நிலவு
ஆ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
பெ: கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
ஆ: சோர்ந்த போது சேர்த்த சுருதி
பெ: சொர்க்கலோகம் காட்டுதிங்கே
ஆ: உலகமே ஆடும் தன்னாலே
பெ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
ஆ: கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
...
#200 பாட்டுத் தலைவன் பாடினால் - இதய கோயில்
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment