#208 கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி


: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
...

பெ: மனசு தடுமாறும்.. அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்.. ஒரு தயக்கம் தடை போடும்
: நித்தம் நித்தம் உன் நெனப்பு.. நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு.. பாதை ரெண்டு.. வண்டியெங்கே சேரும்
பெ: பொத்தி வச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இந்தத் துன்பம் யாரால
...

: பறக்கும் திசையேது.. இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது.. அது உனக்கும் புரியாது
பெ: பாறையிலே பூ முளைச்சுப் பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
: காலம் வரும் வேளையிலே.. காத்திருப்பேன் பொன் மயிலே
பெ: தேரு வரும் உண்மையிலே.. சேதி சொல்வேன் கண்ணாலே

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே

0 மறுமொழிகள்:

Post a Comment