#203 அடி ஆத்தாடி இள மனசொண்ணு - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி


பெ: அடி ஆத்தாடி..
...
பெ: அடி ஆத்தாடி..
&பெ: இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
பெ: அடி அம்மாடி..
&பெ: ஒரு அலை வந்து மனசுல அடிக்கிது.. அதுதானா
: உயிரோடு
பெ: உறவாடும்
: ஒரு கோடி ஆனந்தம்
பெ: இவன் மேகம் ஆக யாரோ காரணம்
: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி அம்மாடி..
...

பெ: மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னப் பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டிப் பாடாதோ
: இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல
முன்னப் பின்ன நேர்ந்ததில்ல.. மூக்கு நுனி வேர்த்ததில்ல
பெ: கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச் சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ..
...

பெ: லலலல லா.. லலலல லலலல லா..
லலலல லா.. லலலல லா.. லலலல லா..
லலலல லலலல லலலல லா..
...

: தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்
பெ: வார்த்தை ஒண்ணு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன
கட்டு மரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
: கட்டுத்தறிக் காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத் தொட்டு தென்றல் பேச.. தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன் மானே..

பெ: அடி ஆத்தாடி..
&பெ: இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி அம்மாடி..
&பெ: ஒரு அலை வந்து மனசுல அடிக்கிது.. அதுதானா
: உயிரோடு
பெ: உறவாடும்
: ஒரு கோடி ஆனந்தம்
பெ: இவன் மேகம் ஆக யாரோ காரணம்
: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி ஆத்தாடி..
...

0 மறுமொழிகள்:

Post a Comment