படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே.. உறவுமில்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...
சுதி சேரும்போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புது.. இழுந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா.. சந்தித்தாலும் சிந்திப்போமா.. மாயம்தானா
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...
நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு.. கண்ணீர்தானே மிச்சமாச்சு.. பாசம் ஏது
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே.. உறவுமில்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...
#207 போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment