படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: வா வா.. வஞ்சி இள மானே
...
ஆ: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...
ஆ: ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய் விட்டுச் சிரிக்காதா
பெ: வாய் விட்டுச் சிரிக்கும் மாலை வேளையில் தேன் சொட்டுத் தெரிக்காதா
ஆ: தேகத்தில் உனக்குத் தேன் கூடு இருக்கு.. தாகத்தைத் தணித்திட வா
பெ: ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
ஆ: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
பெ: போதும் போதும்.. போ..
ஆ: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...
பெ: நானுன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி.. நூலாட்டம் இளைத்தேனே
ஆ: நான் கூடத் தவித்தேன் வேறு மாதிரி.. பாலாட்டம் கொதித்தேனே
பெ: ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்.. ஆளைத்தான் அசத்துவதேன்
ஆ: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
பெ: கால் மீது கால் போட்டு ஆட.. கல்யாண நாளில்லையா
ஆ: நேரம் காலம் ஏன்
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
ஆ: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...
#195 வா வா வஞ்சி இள மானே - குரு சிஷ்யன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment