படம்: ஆராதனை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ராதிகா
லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா..
இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
...
ஆசை நதி மடை திறக்கும்.. பாஷை வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்.. தாளாது சுடு பாரங்கள்
காவியக் காதலின் தேசங்களே.. ஊமையின் காதலைப் பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே
தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
...
பாவை விழித்துளி விழுந்து பூவின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை.. போராடும் ஒரு பூமாலை
சூரிய காந்திகளாடியதோ.. சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ
தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா..
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment