#181 புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆஹாஹஹா.. ஆஹாஹஹா.. ஆஹாஹஹா.. ஆஹாஹா..
...

புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
...

பூவில் தோன்றும் வாசம்.. அதுதான் ராகமோ
இளம்பூவை நெஞ்சில் தோன்றும்.. அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
...

ஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
...

வானில் தோன்றும் கோலம்.. அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது.. இசை பாடுது.. வழிந்தோடிடும் சுவை கூடுது

புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்
லல்ல லல லா.. லாலல லா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment